education

img

15-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய கல்வி அமைச்சகம்

பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

கொரோனா நோய் தொற்று காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் திறக்க படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றன அதனை தொடர்ந்து அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:
* பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கும் ஏற்பாடு செய்து உட்புற இடத்தில் காற்று ஓட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

*  பள்ளிகளில் அவசர சிகிச்சை, சுகாதார ஆய்வுக் குழு போன்ற பணிக்குழுக்களை உருவாக்க வேண்டும். பள்ளிகள் தங்களுக்கு ஏற்றவாறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்.

* இருக்கை திட்டத்தைத் திட்டமிடும்போதும், நுழைவு மற்றும் வெளியேறும் நேரங்களின் போதும் சரீர இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

* வகுப்புகளின் போது முககவசம் அணிவது கட்டாயம்.

* அனைத்து வகுப்புகளுக்கும் கல்வி காலண்டர் மாற்றங்களுக்கான திட்டமிடல் வேண்டும். பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு அனைத்து மாணவர்களிடமும் புத்தகங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* முழுநேர பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர் / செவிலியர் / மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து அவர்களது உடல்நலன் குறித்து தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

* மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இருவருக்கும் ஏற்ற வகையில் நெகிழ்வான வருகை மற்றும் மருத்துவ விடுப்பு கொள்கைகள் (sick leave policies) வகுக்கப்பட வேண்டும். வருகை விதிமுறைகளில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும்.

* மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கை தேவை.

* பெற்றோர்களின் ஒப்புதலை பெற்று அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிகளுக்குள் அனுமதி வேண்டும்

* தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்றி அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து வெளியிடலாம்.

* பள்ளிகளை அக்டோபர் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட 2-3 வாரங்கள் வரை மதிப்பீடு செய்யப்பட மாட்டது.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.